மேட்டூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6,550 கன அடியாக அதிகரித்துள்ளது.
இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 46.55 அடியிலிருந்து 46.54 அடியாக குறைந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6,479 கன அடியிலிருந்து வினாடிக்கு 6,550 கன அடியாக அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க: ஜி20: ராஜ்காட்டில் உலக நாடுகளின் தலைவர்கள்!
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 6,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 15.70 டிஎம்சியாக உள்ளது.