தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

இலங்கை கடற்படையால் 4 தமிழக மீனவர்கள் கைது!

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர்களில் 4 பேரை இலங்கை கடற்படையினர் வியாழக்கிழமை அதிகாலை கைது செய்தனர்.

News image
Updated On :14 செப்டம்பர் 2023, 3:52 am

DIN

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர்களில் 4 பேரை இலங்கை கடற்படையினர் வியாழக்கிழமை அதிகாலை கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு இறங்குதளத்தில் இருந்து 163 விசைப்படகுகள் புதன்கிழமை மாலை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். 

இதில், செந்தில் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் சென்ற அருண், மருது, சுந்தரம், செல்வராஜ் ஆகிய 4 மீனவர்களும் 32 நாட்டிக்கல் மைல் தொலைவில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். 

அப்போது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக 4 பேரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் 4 பேரையும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.