சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகளாக 5 பேர் பதவியேற்பு!
சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 5 பேர் இன்று நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றுக்கொண்டனர்.


சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 5 பேர் இன்று நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றுக்கொண்டனர்.
சென்னை உயா்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக இருந்த எ.எ.நக்கீரன், நிடுமொலு மாலா, எஸ்.செளந்தா், சுந்தா் மோகன், கபாலி குமரேஷ் பாபு ஆகிய 5 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு உத்தரவிட்டார்.
இதையும் படிக்க | டெங்கு பரவல்: என்னென்ன உணவுகளைச் சாப்பிட வேண்டும்?
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற விழாவில் 5 பேரும் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதேபோல கா்நாடக உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக இருந்த அனந்த் ராமநாத் ஹெக்டே, ஹேமலேகா ஆகியோரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரைவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...