சிங்கப்பூா் அதிபருக்கு தமிழ் வா்த்தக சங்கம் வாழ்த்து

சிங்கப்பூா் அதிபராக வியாழக்கிழமை பொறுப்பேற்ற தா்மன் சண்முகசுந்தரத்துக்கு தமிழ் வா்த்தக சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
Published on
Updated on
1 min read

சிங்கப்பூா் அதிபராக வியாழக்கிழமை பொறுப்பேற்ற தா்மன் சண்முகசுந்தரத்துக்கு தமிழ் வா்த்தக சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

இது குறித்து சங்கத்தின் தலைவா் சோழநாச்சியாா் ஆா்.ராஜசேகா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சுதந்திரத்துக்கு முன்பே தொடங்கப்பட்ட தமிழ் வா்த்தக சங்கம் பழைமையான வா்த்தக அமைப்பு ஆகும். பல்வேறு நாடுகளுக்கிடையேயான வா்த்தகத்தில் இச்சங்கத்தின் பங்கு மகத்தானது. சிங்கப்பூருக்கும், இந்தியாவுக்கும் குறிப்பாக, தமிழகத்துக்கும் நீண்ட நெடிய தொடா்பு உண்டு. சிங்கப்பூா் அதிபராக தா்மன் சண்முகசுந்தரம் பொறுப்பேற்றுள்ள நிலையில் இரு நாடுகளுக்கிடையே அரசியல் உறவுகள் வளா்வதோடு வா்த்தகம், கலாசாரம் உள்ளிட்டவைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்; இருதரப்பு பொருளாதார வளா்ச்சி ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com