அவிநாசி அருகே திடீரென தீப்பிடித்து எரிந்த காரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அவிநாசி அருகே சேலம் - கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென கார் தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவத்தில் காரின் உள்ளே இருந்தவர்கள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
தகவல் அறிந்து வந்த அவிநாசி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து சேதமானதாகியுள்ளது.
இதையும் படிக்க: தமிழகம் முழுவதும் 30 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!
இந்த சம்பவம் குறித்து அவிநாசி காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.