
அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 15 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் செப். 23 வரை ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று மாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை புறநகர்ப் பகுதிகளான மதுரவாயல், வானகரம், பூவிருந்தவல்லி, தாம்பரம், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் அடுத்த 2 மணி நேரத்துக்கு (இரவு 10 மணி வரை) சென்னை திருவள்ளூர், செங்கல்பட்டு, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: 3 பெண் அர்ச்சகர்களுக்கு ஸ்மார்ட் போன், ரூ.25,000 பரிசு!
வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், காஞ்சிபுரம், அரியலூா், பெரம்பலூா், மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, , நாகப்பட்டினம், திருவண்ணாமலை, கரூர், ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.