பெங்களூரு முழு அடைப்புப் போராட்டம்: ஓசூரில் பேருந்துகள் நிறுத்தம்

பெங்களூருவில் நடைபெற்றுவரும் முழு அடைப்புப் போராட்டம் காரணமாக ஓசூரில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

பெங்களூருவில் நடைபெற்றுவரும் முழு அடைப்புப் போராட்டம் காரணமாக ஓசூரில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து பெங்களூரு செல்லும் அரசு பேருந்துகள் ஓசூரில் நிறுத்தப்பட்டுள்ளது. சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர், பெங்களூரு செல்லும் 11 அரசு பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

காவிரிநீரை தமிழகத்துக்கு திறந்துவிடுவதைக் கண்டித்து, விவசாய சங்கங்கள், கன்னட அமைப்புகள் சார்பில் பெங்களூரில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இப்போராட்டத்தை முன்னிட்டு பெங்களூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிடுவதைக் கண்டித்தும், மேக்கேதாட்டு அணை திட்டத்தை அமல்படுத்தக் கோரியும் செப்.26ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பெங்களூரில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com