தனியார் வாகனங்களில் அரசு முத்திரை இருந்தால் நடவடிக்கை!

விதிகளுக்குப் புறம்பாக தனியார் வாகனங்களில் அரசு முத்திரைகளை பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

விதிகளுக்குப் புறம்பாக தனியார் வாகனங்களில் அரசு முத்திரைகளை பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த அரசு மருத்துவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கு குறித்த விசாரணையில் இந்த தகவலை தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு இந்த வழக்கு இன்று (செப். 26) விசாரணைக்கு வந்தது. 

அப்போது, விதிகளை மீறி செயல்படும் வாகனங்கள் மீதான நடவடிக்கை என்பது ஒரு தொடர் நடைமுறை என்பதால், இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும்படி அரசுக்கு அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com