நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

மகளிர் உதவித் தொகைத் திட்டம்: பிற மாநிலங்களும் பின்பற்றும்!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத்திட்டத்தின் கீழ் மகளிருக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை பிற மாநிலங்களும் பின்பற்றத் தொடங்கியுள்ளதாக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :26 செப்டம்பர் 2023, 8:33 pm IST

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத்திட்டத்தின் கீழ் மகளிருக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை பிற மாநிலங்களும் பின்பற்றத் தொடங்கியுள்ளதாக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக பேசிய அவர், கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்டமாநிலங்களிலும் மகளிர் உரிமைத்தொகை தரப்படும் என தேர்தல் வாக்குறுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. 

மகளிரின் பொருளாதார முன்னேற்றத்துக்காக  ‘மகளிர் சுயஉதவிக்குழு’ எனும் முன்னோடி திட்டத்தை நாட்டிலேயே முதன் முறையாக முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி தருமபுரியில் தொடங்கி வைத்தார். 

மகளிரின் உழைப்பிற்கு ஓர் அங்கீகாரமாக செயல்படுத்தப்பட்டுள்ள கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்துக்கான விண்ணப்பப் பதிவுகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் தருமபுரியில் தொடங்கி வைத்தார் எனக் குறிப்பிட்டார். 

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் 500 மகளிருக்கு டெபிட் கார்டுகளை இன்று அமைச்சர் உதயநிதி வழங்கினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.