சென்னை: செல்போன் உதிரிபாகம் தயாரிக்கும் நிறுவனமான ஃப்ளெக்ஸ் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் புதன்கிழமை அதிகாலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வரி ஏய்ப்பு தொடர்பான புகாரில் சென்னை, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஃப்ளெக்ஸ் இந்தியா செல்போன் உதிரிபாக தயாரிக்கும் நிறுவனம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், வரி ஏய்ப்பு செய்துள்ளத்தாகவும் புகார்கள் எழுந்த நிலையில், புதன்கிழமை (செப்.27) அதிகாலை சென்னை, ஸ்ரீபெரும்புதூரில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.