நெல்லை - சென்னை இடையே நாளை சிறப்பு ரயில்!

நெல்லை - சென்னை எழும்பூர் இடையிலான வந்தே பாரத் ரயில் (20666) சேவை இன்று (செப். 27) தொடங்கியது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

நெல்லை – சென்னை இடையே நாளை சிறப்பு ரயில் (06052) இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

செப். 28ஆம் தேதி மாலை 3 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 3.45 மணிக்கு சென்னை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி 9 ரயில்சேவைகளைத் தொடக்கி வைத்தார். அதில் சென்னை - நெல்லை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையும் அமைந்தது. 

நெல்லை - சென்னை எழும்பூர் இடையிலான வந்தே பாரத் ரயில் (20666) சேவை இன்று (செப். 27) தொடங்கியது. இந்த ரயில் காலை 6 மணிக்குப் புறப்பட்டு, மதியம் 1.50 மணிக்கு சென்னையை வந்தடைந்தது. இரு மார்க்கங்களிலும் செவ்வாய்க்கிழமை தவிர, வாரத்தில் 6 நாட்களும் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com