கருணாநிதி படத்துக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை!

நாடாளுமன்ற வளாகத்தில் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்துக்கு மலர்தூவி காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மரியாதை செலுத்தினர்.
கருணாநிதி படத்துக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை
கருணாநிதி படத்துக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை
Updated on
1 min read

தில்லி: நாடாளுமன்ற வளாகத்தில் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்துக்கு மலர்தூவி காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மரியாதை செலுத்தினர்.

முன்னாள் திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கருணாநிதியின் புகைப்படத்துக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள திமுக எம்.பி.க்களின் அறையில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் புகைப்படத்துக்கு சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்வில், திமுக மாநிலங்களவை தலைவர் திருச்சி சிவா, திமுக மற்றும் காங்கிரஸின் எம்.பி.க்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com