முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5ஆவது நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. கருணாநிதியின் நினைவு நாளையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலையில் இருந்து மெரினாவில் உள்ள அவரது நினைவிடம் வரை அமைதிப் பேரணி நடைபெற்றது.

மேலும் பேரணியில் அமைச்சர்கள், தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர். பேரணியில் ஏராளமான தி.மு.க.வினர் கருப்புச் சட்டை அணிந்து பங்கேற்றனர். பேரணி மெரினாவை அடைந்ததும் கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

ஸ்டாலினை தொடர்ந்து அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். முன்னதாக சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்திலும் முதல்வர் ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 1 கி.மீ. தூரம் அமைதிப் பேரணியாக சென்று கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சு; ஷுப்மன் கில் விளையாடவில்லை!

வரலாறு காணாத கடனில் தமிழ்நாடு! பியூஷ் கோயல் பேட்டி | ADMK | BJP
நூறு சாமி டீசர்!

இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


