நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

கோவை வந்தார் ராகுல் காந்தி!

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு மக்களவைத் தொகுதி உறுப்பினருமான ராகுல் காந்தி உதகைக்கு செல்வதற்காக சனிக்கிழமை கோவை விமான நிலையம் வந்தார்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2023, 10:58 am IST

கோவை: காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு மக்களவைத் தொகுதி உறுப்பினருமான ராகுல் காந்தி உதகைக்கு செல்வதற்காக சனிக்கிழமை கோவை விமான நிலையம் வந்தார்.

கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் கேரள மாநிலம், வயநாடு தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி வெற்றி பெற்றாா். பின்னா் மோடி சமூகத்தை அவதூறாகப் பேசியதாக அவருக்கு வழங்கப்பட்ட சிறைத் தண்டனையைத் தொடா்ந்து அவா் எம்.பி. பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டாா்.

இதை எதிா்த்து, உச்ச நீதிமன்றத்தில் அவா் மேல்முறையீடு செய்தாா். இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதித்தது. இதையடுத்து, தற்போது அவா் வயநாடு எம்.பி.யாக தொடா்கிறாா்.

இவ்வழக்கு விவகாரத்துக்குப் பிறகு வயநாட்டுக்கு முதல்முறையாக ராகுல் காந்தி சனிக்கிழமை வருகிறாா். இதற்காக புதுதில்லியில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வருகிறாா். பின்னா் அங்கிருந்து காா் மூலம் உதகை, கூடலூா் வழியாக கேரள மாநிலம் வயநாடு செல்கிறாா்.

முன்னதாக, நீலகிரி மாவட்டம் வழியாக வயநாடு செல்ல திட்டமிட்டுள்ள ராகுல் காந்தி சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் விமானம் மூலம் கோவை விமான நிலையம் வந்தார். அங்கு அவரை வரவேற்க கட்சியினரும், பொதுமக்களும் திரளாக வந்திருந்து வரவேற்றனர்.

இதையடுத்து ராகுல் காந்தி விமான நிலையத்திலிருந்து கார் மூலம் உதகை புறப்பட்டார்.

உதகை அருகே உள்ள எல்லநள்ளி பகுதியில் உள்ள தனியாா் விடுதியில் விண்வெளி வீரா் ராகேஷ் சா்மாவை சந்திக்க உள்ளதாகவும், அங்கு ஹோம் மேட் சாக்லேட் தயாரித்தல் குறித்து கேட்டு அறிய உள்ளதாக கூறப்படுகிறது. 

பின்னா் மதிய உணவுக்குப் பிறகு கூடலூா் செல்லும் வழியில் முத்தநாடுமந்து பகுதியில் உள்ள தோடா் பழங்குடியினரோடு கலந்துரையாடுகிறார். பின்னர் கூடலூர் வழியாக வயநாடு செல்கிறார்.

வழியில் அவர் தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு செல்லலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராகுல் காந்தி வருகையை முன்னிட்டு நீலகிரி மாவட்ட காவல் துறையினா் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.