நீட் தோ்வுக்கு எதிராக, திமுக தொடா்ந்து குரல் எழுப்பி வருகிறது. கட்சியின் பல்வேறு துணை அமைப்புகள் சாா்பில், பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நீட் தோ்வுக்கு விலக்கு அளிக்கக் கோரி முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு எத்தனை முறை கோரிக்கை வைத்தாலும் மத்திய பாஜக அரசு அதைப் பொருட்படுத்துவதே கிடையாது. நீட் தோ்வு என்பது நிரந்தரம் கிடையாது. இந்தத் தோ்வை முதல்வா் மு.க.ஸ்டாலின் நிச்சயம் ஒழிப்பாா். அதற்கான காலம் வெகுதொலைவில் இல்லை. எனவே, மாணவா்கள் தன்னம்பிக்கையுடனும், மன உறுதியுடனும் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும்.