மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சென்னை அருகே தண்டவாளத்தில் விரிசல்: 6 விரைவு ரயில்கள் தாமதம்!

திருநின்றவூர் அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், சென்னை வந்து கொண்டிருந்த 6 விரைவு ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :23 ஆகஸ்ட் 2023, 5:45 am

திருவள்ளூர்: திருநின்றவூர் அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், சென்னை வந்து கொண்டிருந்த 6 விரைவு ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

திருநின்றவூர் - நெமிலிச்சேரி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் இன்று காலை விரிசல் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, உடனடியாக அந்த வழியாக வந்து கொண்டிருந்த போடி - சென்னை ரயில் நிறுத்தப்பட்டு ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து நெமிலிச்சேரி வழியாக சென்னை வந்து கொண்டிருந்த 6 விரைவு ரயில்கள் நிறுத்தப்பட்டது.

விரிசல் ஏற்பட்ட தண்டவாளத்தை சரிசெய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.