திருவள்ளூர்: திருநின்றவூர் அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், சென்னை வந்து கொண்டிருந்த 6 விரைவு ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது.
திருநின்றவூர் - நெமிலிச்சேரி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் இன்று காலை விரிசல் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, உடனடியாக அந்த வழியாக வந்து கொண்டிருந்த போடி - சென்னை ரயில் நிறுத்தப்பட்டு ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து நெமிலிச்சேரி வழியாக சென்னை வந்து கொண்டிருந்த 6 விரைவு ரயில்கள் நிறுத்தப்பட்டது.
விரிசல் ஏற்பட்ட தண்டவாளத்தை சரிசெய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.