சென்னை: அடுத்த வாரம் மீண்டும் புதிய புயல் உருவாகவிருப்பதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவி வரும் நிலையில், மக்கள் அச்சப்பட வேண்டாம் என தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம் கொடுத்துள்ளார்.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகி, சென்னை மற்றும் ஆந்திரத்தைப் புரட்டிப்போட்ட மிக்ஜம் புயலின் பாதிப்பிலிருந்து இன்னும் மீளாத நிலையில், அடுத்த வாரம் மீண்டும் ஒரு புயல் உருவாகவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகிவருகின்றன.
இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருப்பதாவது, சென்னைக்கு அடுத்த புயல் வரவிருப்பதாக வரும் தகவல்கள் அடிப்படையற்றது. இதுபோனற் புரளிகளை தயவுகூர்ந்து நம்ப வேண்டாம். அரபிக் கடலில், டிசம்பர் 10ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகலாம். ஆனால் அது இந்தியப் பெருங்கடல் நோக்கி நகர்ந்துவிடும். அதனால் சென்னைக்கு எந்த ஆபத்தும் நேரிடாது என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க.. கோவை, நீலகிரியில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!
அதேவேளையில், சென்னைக்கு இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2099 மி.மீ. மழை மழை பெய்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மிக்ஜம் பயுல் தொடர்பாக சமூக வலைதளத்தில் (எக்ஸ்) பதிவிட்டிருந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கொளத்தூர், திரு. வி.க.நகர் மற்றும் எழும்பூர் தொகுதிகளில் பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டேன்.
வெள்ளநீர் தேங்கியிருக்கும் நிலையில், மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், உயிரிழப்புகளைத் தடுக்கவும்தான் சில இடங்களில் மின்சாரம் இன்னும் வழங்கப்படவில்லை. மின் இணைப்புகள் வழங்கும் பணிகள் கவனத்தோடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அமைச்சர்கள், அதிகாரிகள் முதல் கடைநிலைப் பணியாளர்கள் வரை மக்களைப் பாதுகாக்கக் களத்தில் ஓய்வின்றி உழைத்து வருகிறார்கள். விரைவில் நிலைமை சீரடையும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 04) - இன்று வெற்றி யாருக்கு?

லிவ் இன் முறையில் வாழ்பவா்களுக்கும் ஐபிசி பிரிவு 498ஏ பொருந்தும்: உச்சநீதிமன்றம் தீா்ப்பு

தொழில்நுட்பத்துக்கு கைமாறும் அதிகாரங்கள்
சென்னை - குருவாயூா் விரைவு ரயில் 10 நாள்கள் தாமதமாக இயங்கும்!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



