மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 67.70அடியாக உயர்ந்துள்ளது.
காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் லேசான மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2128 கனஅடியிலிருந்து 3367 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 30.75 டிஎம்சியாக உள்ளது.