வெள்ள நிவாரணத்தை ரூ.12,000-ஆக உயர்த்த வலியுறுத்தல்!

மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் வெள்ள நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 
வெள்ள நிவாரணத்தை ரூ.12,000-ஆக உயர்த்த வலியுறுத்தல்!
Published on
Updated on
1 min read

மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் வெள்ள நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 

புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ள எடப்பாடி பழனிசாமி, வெள்ள நீருடன் கழிவுநீரும் சேர்ந்துள்ளதால் மக்கள் ஒரு வாரமாக வேலைக்குச் செல்ல இயலவில்லை.

திமுக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறைபாட்டால் அனைத்து உடமைகளையும் பொதுமக்கள் இழந்துள்ளனர்.

இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு முமாம்களை நடத்தி அரசு செலவில் பழுது நீக்கி தர வேண்டும். மணலி, எர்ணாவூர், பகுதிகளில் எண்ணெய் கழிவால் பாதித்த மக்களுக்கு கூடுதலாக ரூ.25,000 நிவாரணம் வழங்க வேண்டும் 

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் மழை பாதித்த நெற்பயிருக்கு இழப்பீடாக ஏக்கருக்கு ரூ.25,000 வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com