தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தென்காசியில் பிரபலமான புரோட்டாக் கடை குடோனுக்கு சீல்

தென்காசியில் இயங்கி வரும் மிகப் பிரபலமான  புரோட்டாக் கடைக்குச் சொந்தமான குடோனுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்துச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

News image

தென்காசியில் பிரபலமான புரோட்டாக் கடை குடோனுக்கு சீல்

Updated On :9 பிப்ரவரி 2023, 12:41 pm

தென்காசியில் இயங்கி வரும் மிகப் பிரபலமான  புரோட்டாக் கடைக்குச் சொந்தமான குடோனுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்துச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அடுத்த உத்தரவு வரும் வரை, குடோனைப் பயன்படுத்தக் கூடாது என்று தடை விதித்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தென்காசி மாவட்டத்தில் இயங்கி வரும் புரோட்டக் கடை உலகப் புகழ்பெற்றது. குற்றாலம் அருவியில் குளித்து மகிழ வரும் அசைவப் பிரியர்கள் அடுத்து நாடுவது பிரானூரில் செயல்பட்டு வரும் புரோட்டக் கடையைத்தான்.

இந்த நிலையில், பிரானூரில் இயங்கி வரும் புரோட்டாக் கடையில் கலப்பட மற்றும் கெட்டுப்போன உணவுகளைக் கொண்டு சமைக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன்.

இது குறித்து சோதனை செய்ய உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இன்று சமையல் பொருள்கள் வைக்கப்பட்டிருக்கும் குடோனுக்குச் சென்றனர். ஆனால், குடோனை சோதனை செய்வதுற்கு உரிமையாளர் அனுமதி மத்து, குடோனை திறக்கமுடியாது என்று கூறிவிட்டதால், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் குடோனுக்கு சீல் வைத்ததாகக் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.