திருப்பூர் மாநகரில் இருவேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்திய என்.ஐ.ஏ அதிகாரிகள், விசாரணைக்காக இரண்டு பேரை பெங்களூருக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
கர்நாடகம் மாநிலம் மங்களூர் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி குக்கர் வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக புதன்கிழமை திருப்பூர் மாநகருக்குள்பட்ட ராம் காலனி மற்றும் நல்லூர் மண்டலத்திற்குள்பட்ட திருநகர் உள்ளிட்ட இருவேறு இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் காலை 6 மணி முதல் சோதனை மேற்கொண்டனர்.
இதையும் படிக்க | நெல்லையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர சோதனை!
ஒரே நேரத்தில் இருவேறு இடங்களில் இருவர் வீட்டில் சோதனை நடத்திய என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை முடிவில் ராம் காலனியில் உள்ள முகமது ரிஸ்வான் மற்றும் நல்லூர் சிறுநகரைச் சேர்ந்த சிக்கந்தர் பாஷா ஆகிய இருவரை விசாரணைக்காக பெங்களூருக்கு அழைத்துச் சென்றனர்.
கர்நாடகம் மாநிலம் மங்களூர் பகுதியில் குக்கர் வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக இருவரிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ள இருப்பதாகவும் அதற்காக இரண்டு பேரும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக மாநகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.