மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திருவாரூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

இரண்டு நாள் பயணமாக திருவாரூர் மாவட்டத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வந்தார்.

News image
Updated On :21 பிப்ரவரி 2023, 10:01 am

DIN

திருவாரூர்: இரண்டு நாள் பயணமாக திருவாரூர் மாவட்டத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வந்தார்.

முன்னதாக, மாவட்ட எல்லையான கோவில்வெண்ணி பகுதியில் திமுக சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

தொடர்ந்து, திருவாரூரில் சன்னதி தெருவில் உள்ள கலைஞர் இல்லத்துக்கு வந்தார். முதல்வரின் வருகையையொட்டி தடுப்புகள் அமைத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Story image

காரிலிருந்து இறங்கிய முதல்வர், தடுப்புகள் அருகே வந்து அங்கிருந்தவர்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். அங்கிருந்தவர்களிடம் கை குலுக்கி, போலீசாரின் மரியாதை ஏற்றுக்கொண்டு வீட்டுக்குள் சென்றார்.

மாலையில் காட்டூரில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மையாரின் நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்துகிறார்.

Story image

அத்துடன், காட்டூரில் 7000 சதுர அடி பரப்பளவில் ரூ. 12 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் மணிமண்டபம், திருமண மண்டபம் இணைந்த அருங்காட்சியகத்தின் கட்டுமானப் பணிகளை பார்வையிடுகிறார்.

இரவில், சன்னதி தெருவில் தங்கும் அவர், புதன்கிழமை காலை மன்னார்குடியில் நடைபெறும் திமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவில் பங்கேற்கிறார்.

Story image

இதையொட்டி, முதல்வர் செல்லும் பாதைகளில் கூடுதல் போலீஸார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்புப் பணிக்கென, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த போலீஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், முதல்வரின் வருகையையொட்டி, திருவாரூர் மாவட்டத்தில் இரண்டு நாள்கள் ட்ரோன் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.