ஆவின் நிறுவனத்தில் எந்த நோட்டீசும் கொடுக்காமல் 25 ஊழியர்களை பணிநீக்கம் செய்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
லஞச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தி தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் பணிநீக்கத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. அதிமுக ஆட்சியில் லஞ்சம் பெற்றுகொண்டு தகுதியற்ற நபர்களுக்கு பணி வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து, பணிநீக்க உத்தரவை எதிர்த்து பவ்னீத் சூர்யா, ராஜசேகர், எழுமலை உள்ளிட்ட 25 பேர் வழக்கு தொடர்ந்தனர். 2 ஆண்டுகளாக பணியில் நீடிக்கும் நிலையில் எந்த நோட்டிசும் தராமல் பணிநீக்கம் செய்யப்பட்டதாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆவின் நிறுவனத்தில் எந்த நோட்டீசும் கொடுக்காமல் 25 ஊழியர்களை பணிநீக்கம் செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளனர்.
இதையும் படிக்க: இதுவரை பார்த்திடாத மகளின் படங்களைப் பகிர்ந்த கோலி - அனுஷ்கா
மேலும், ஆவின் நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 17 ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.