ஆளுநர் உரைக்கு நன்றி கலந்த வருத்தம்: தீர்மானம் தாக்கல்

ஆளுநர் உரைக்கு நன்றியுடன் வருத்தத்தையும் பதிவு செய்ய வேண்டும் என சட்டபேரவையில் திமுக எம்எல்ஏ கம்பம் ராமகிருஷ்ணன் தீர்மானம் தாக்கல் செய்துள்ளார். 
ஆளுநர் உரைக்கு நன்றி கலந்த வருத்தம்: தீர்மானம் தாக்கல்

ஆளுநர் உரைக்கு நன்றியுடன் வருத்தத்தையும் பதிவு செய்ய வேண்டும் என சட்டபேரவையில் திமுக எம்எல்ஏ கம்பம் ராமகிருஷ்ணன் தீர்மானம் தாக்கல் செய்துள்ளார். 

தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், கடந்த ஜன. 9 அன்று சட்டப்பேரவையின் முதல் நாள் கூட்டத்தொடரின் தொடக்க உரையில், தமிழ்நாடு, பெரியார், அம்பேத்கர், காமராஜர், அண்ணா, கருணாநிதி பெயர்களை உச்சரிக்க ஆளுநர் மறுத்துள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

ஆளுநரின் இந்த செயலுக்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்வேறு தரப்பினரிடமும் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆளுநரின் இந்த செயல்பாட்டுக்கு திமுக கூட்டணி கட்சிகள் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன. 

அன்றைய தினம் ஆளுநர் அவையில் இருக்கும்போதே முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து தீர்மானம் இயற்றினார். 

இந்நிலையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது ஆளுநர் உரைக்கு நன்றியுடன் வருத்தத்தையும் பதிவு செய்ய வேண்டும் என்று பேரவையில் திமுக எம்எல்ஏ கம்பம் ராமகிருஷ்ணன் தீர்மானம் தாக்கல் செய்துள்ளார். 

தமிழ்நாடு அரசால் தயாரிக்கப்பட்டு ஆளுநரின் ஒப்புதல் பெற்ற உரையின் சில பகுதிகளை இணைத்தும் விடுத்தும் ஆளுநர் உரையாற்றியமைக்கு பேரவை தனது வருத்தத்தை பதிவு செய்கிறது என்று தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளார். தீர்மானம் மீதான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com