தமிழ்நாடு
அண்ணாமலைக்கு 'இஸட்' பிரிவு பாதுகாப்பு?
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு 'இஸட்' பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு 'இஸட்' பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மாவோயிஸ்டுகள், மத தீவிரவாதிகளிடமிருந்து மிரட்டல் வருவதாக உளவுத்துறை கூறியதை அடுத்து இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன்படி, தற்போது 'ஒய்-'(Y-) பிரிவில் உள்ள அண்ணாமலையின் பாதுகாப்பு 'இஸட்-'(Z-) பிரிவுக்கு மாற்றப்படுகிறது. 33 சிஆர்பிஎஃப் கமாண்டோக்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர்.
இதையும் படிக்க | சரத் யாதவின் உடலுக்கு ராகுல் காந்தி அஞ்சலி!