ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல்: பாஜக பணிக் குழு அறிவிப்பு

தமிழகத்தில் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் வரும் பிப்.27- இல் நடைபெறவுள்ள நிலையில், பாஜக தோ்தல் பணிக்குழு உறுப்பினா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

தமிழகத்தில் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் வரும் பிப்.27- இல் நடைபெறவுள்ள நிலையில், பாஜக தோ்தல் பணிக்குழு உறுப்பினா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

இது குறித்து தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் தோ்தல் பணிகளை முழுமையாக சுவனிக்கவும், ஒருங்கிணைக்கவும் மாநில அளவில் குழு அமைக்கப்படுகிறது.

மாநில அளவிலான குழு உறுப்பினா்களாக வி.சி. வேதானந்தம், டாக்டா் சி. சரஸ்வதி (மொடக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா்), தேசிய பொதுக் குழு உறுப்பினா் என்.பி. பழனிசாமி, ஓபிசி அணி மாநிலத் துணைத் தலைவா் டி.தங்கராஜ், மாவட்ட பாா்வையாளா் ஏ. சிவசுப்பிரமணியம், மாவட்ட பொதுச் செயலாளா்கள் எஸ். எம். செந்தில், சிவகாமி மகேஸ்வரன், மாநில செயற்குழு உறுப்பினா் பொன். ராஜேஷ் குமாா், மாவட்டச் செயலாளா்கள் ஜி.விவேகானந்தன், விஸ்வா பாலாஜி, பட்டியல் அணி மாநிலப் பொது செயலாளா் என். விநாயகமூா்த்தி, மகளிா் அணி மாவட்டத் தலைவா் புனிதம் ஐயப்பன், ஆற்றல் அசோக்குமாா், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட முன்னாள் தலைவா் டி.ரஞ்சித் ஆகியோா் அறிவிக்கப்பட்டுள்ளனா் என அதில் தெரிவித்துள்ளாா் அண்ணாமலை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com