பழனி முருகன் கோயிலில் குடமுழுக்கு தமிழில் நடத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோயிலில் வருகிற 27 ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.
பழனி கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த அறநிலையத்துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதையொட்டி பழனி கோயிலில் குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு இன்று பார்வையிட்டார்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'பழனி முருகன் கோயிலில் குடமுழுக்கு தமிழில் நடத்தப்படும். ஆகம விதிகளுக்கு உட்பட்டு தமிழில் மந்திரங்கள் ஓத நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்தார்.
முன்னதாக சட்டப்பேரவையிலும் இதுகுறித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, 'முதல்முறையாக பழனி கோயில் குடமுழுக்கிற்கு முழுக்க முழுக்க பத்திரிகை, தமிழில் அச்சடிக்கப்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட ஓதுவார்களை வைத்து தமிழிசை வேத மந்திரங்கள் ஒலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது' என்றார்.
இதையும் படிக்க | ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டி: ஜி.கே.வாசன் சம்மதம்