தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி தூத்துக்குடியில் இன்று நடைபெற்றது.
13-வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி ராஜாஜி பூங்கவில் இருந்து வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கி.செந்தில் ராஜ் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
இப்பேரணியில் கல்லூரி மாணவ-மாணவிகள் வாக்களிப்பதில் அவசியம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி சென்றனர். தொடர்ந்து, பள்ளி மாணவர்- மாணவியரின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையும் படிக்க: சீர்காழி: பேருந்தை மீண்டும் இயக்கக் கோரி மாணவர்கள் போராட்டம்
இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் தி.சாருஸ்ரீ, சார் ஆட்சியர் கௌரவ் குமார், வட்டாட்சியர்கள் செல்வகுமார் (தூத்துக்குடி), ரகு(தேர்தல்) உள்பட பலர் பங்கேற்றனர்.