மணிப்பூரில் பெண்கள் பாலியல் வன்கொடுமை: கல்லூரி மாணவிகள் ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை கண்டித்தும் மன்னார்குடியில் உள்ள பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மணிப்பூரில் நடைபெறும் பாலியல் வன்கொடுமை, வன்முறை சம்பவங்களை கண்டித்து மன்னார்குடியில் கருப்பு உடை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட பான் செக்கர்ஸ்  மகளிர் கல்லூரி மாணவிகள் .
மணிப்பூரில் நடைபெறும் பாலியல் வன்கொடுமை, வன்முறை சம்பவங்களை கண்டித்து மன்னார்குடியில் கருப்பு உடை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட பான் செக்கர்ஸ்  மகளிர் கல்லூரி மாணவிகள் .
Published on
Updated on
1 min read

மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை கண்டித்தும் மன்னார்குடியில் உள்ள பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி மாணவிகள் சார்பில் வெள்ளிக்கிழமை, மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை கண்டித்தும் ,அதனை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையால் வீடுகள் பொது சொத்துக்கள் சூறையாட்டப்பட்டு வருவதுடன் அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பை  உடனடியாக தடுக்க வலியுறுத்தியும், குற்றச் செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து அவர்களுக்கு பாரபட்சம் இல்லாமல் அதிகபட்ச தண்டனையை வழங்கிட வலியுறுத்தி மன்னார்குடி பாலகிருஷ்ணா நகரில் உள்ள கல்லூரி நுழைவாயில் அருகே, மாணவிகள் வழிக்காட்டும் ஒருங்கிணைப்பாளர் சுதா தலைமையில் மாணவிகள் கருப்பு உடை அணிந்து கண்டன வாசகங்கள் இடம்பெற்ற அட்டையை கையில் ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் ,ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்களை விளக்கி கண்டன கோஷங்கள் எழுப்பியவர்கள் பின்னர் அனைவரும் கலைந்து வகுப்பறைக்கு சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com