ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

மணிப்பூரில் பெண்கள் பாலியல் வன்கொடுமை: கல்லூரி மாணவிகள் ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை கண்டித்தும் மன்னார்குடியில் உள்ள பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image

மணிப்பூரில் நடைபெறும் பாலியல் வன்கொடுமை, வன்முறை சம்பவங்களை கண்டித்து மன்னார்குடியில் கருப்பு உடை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட பான் செக்கர்ஸ்  மகளிர் கல்லூரி மாணவிகள் .

Updated On :28 ஜூலை 2023, 12:16 pm IST

மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை கண்டித்தும் மன்னார்குடியில் உள்ள பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி மாணவிகள் சார்பில் வெள்ளிக்கிழமை, மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை கண்டித்தும் ,அதனை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையால் வீடுகள் பொது சொத்துக்கள் சூறையாட்டப்பட்டு வருவதுடன் அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பை  உடனடியாக தடுக்க வலியுறுத்தியும், குற்றச் செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து அவர்களுக்கு பாரபட்சம் இல்லாமல் அதிகபட்ச தண்டனையை வழங்கிட வலியுறுத்தி மன்னார்குடி பாலகிருஷ்ணா நகரில் உள்ள கல்லூரி நுழைவாயில் அருகே, மாணவிகள் வழிக்காட்டும் ஒருங்கிணைப்பாளர் சுதா தலைமையில் மாணவிகள் கருப்பு உடை அணிந்து கண்டன வாசகங்கள் இடம்பெற்ற அட்டையை கையில் ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் ,ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்களை விளக்கி கண்டன கோஷங்கள் எழுப்பியவர்கள் பின்னர் அனைவரும் கலைந்து வகுப்பறைக்கு சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.