Enable Javscript for better performance
கோவையில் பரபரப்பு... காதல் மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர், பெற்றோர் கைது!- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    கோவையில் பரபரப்பு... காதல் மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர், பெற்றோர் கைது!

    By DIN  |   Published On : 01st June 2023 12:51 PM  |   Last Updated : 01st June 2023 06:47 PM  |  அ+அ அ-  |  

    கொலை செய்யப்பட்ட ரமணி (20)

    கொலை செய்யப்பட்ட ரமணி (20)

     

    கோவையில் காதல் மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர் மற்றும் கொலைக்கு உடந்தையாக நாடகமாடிய பெண்ணின் மாமியார், மாமனார் என 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

    கோவை மத்துவராயபுரம் பகுதியை சேர்ந்த சஞ்சய்(20) தனது கல்லூரியில் உடன் படித்த ரமணி (20) என்ற பெண்ணை காதலித்து கடந்த மாதம் 6 ஆம் தேதி திருமணம் செய்துக்கொண்டார். பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு இருந்ததால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து, சஞ்சய் வீட்டில், சஞ்சயின் தாய், தந்தையுடன் வசித்து வந்துள்ளனர்.

    இந்நிலையில், சஞ்சய் கல்லூரியில் உடன் படிக்கும் மற்றொரு பெண்ணிடம் அடிக்கடி செல்போனில் பேசியது தொடர்பாக மனைவி ரமணிக்கு கோபம் ஏற்பட்டு இருவருக்கும் இடையே வாக்குவாதம்  முற்றியதில், ரமணியை சஞ்சை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். 

    கொலையை மறைப்பதற்காக தனது பெற்றோருக்கு போன் செய்ததையடுத்து, இருவரும்  வீட்டுக்கு வந்து இறந்து போன ரமணியின் உடலில் அணிந்திருந்த உடையை அகற்றி சமையலுக்கு பயன்படுத்தும் மஞ்சள் பொடியை கரைத்து உடல் முழுவதும் பூசி குளிக்கவைத்து துணிகளை மாற்றிவிட்டு சாணிப்பவுடர் குடித்தது போன்று மற்றவர்களை நம்பவைத்து, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை கூவி அழைத்து புளியைக் கரைத்து ஊற்றியும்  பின்பு ஆலாந்துறை  தனியார் மருத்துவமனைக்கு ரமணி உடலை தூக்கிச் சென்றுள்ளனர்.

    இதையும் படிக்க | ஷாபாத் சிறுமி கொலை: குற்றவாளிக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்

    காதல் மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர் சஞ்சய், அவரது பெற்றோர் லட்சுமணன்-பக்ருநிஷா

    ரமணியின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் ரமணியின் உடலை பூலுவபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு அலுவலில் இருந்த பெண் மருத்துவர் ரமணி உடலை  பரிசோதித்து இறந்து விட்டதாக கூறியுள்ளார். 

    மருத்துவமனையில் இருந்து காருண்யா நகர் காவல்  நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து  சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மருத்துவமனையில் இருந்த ரமணியின் உடலை கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்மூலம் அனுப்பி  வைத்தனர். 

    மேலும், இது தொடர்பாக போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். 

    இந்த நிலையில் தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக ரமணியின் தந்தை கருப்புசாமி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டு, போலீசார், வருவாய் கோட்டாட்சியர் சஞ்சய் மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். 

    அதில், சஞ்சய் ரமணியின் கழுத்தை நெறித்து கொலை செய்ததும், அதை மறைப்பதற்காக சஞ்சயும் அவரது பொற்றோரும் சேர்ந்து நாடகமாடியது விசாரணையில் தெரிய வந்தது. 

    இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார், ரமணியின் கணவர் சஞ்சய், மாமியார் பக்ருநிஷா, மாமனார் லட்சுமணன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 

    காதல் திருமணம் செய்த சில நாள்களிலேயே இளம் பெண்ணை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp