மதுரை அருகே அரசு பேருந்தும் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதல்: 5 பேர் பலி எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது! தமிழ்நாட்டில் பொறியியல் கலந்தாய்வு தொடங்கியது! விம்பிள்டன் டென்னிஸ்: சின்னர் மீண்டும் சாம்பியன் எழுத்தாளர் பூமணி காலமானார்
/

தமிழ்நாடு வேளாண் பல்கலை மாணவர் சேர்க்கை: தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழத்தில் 2023-24 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெள்ளிக்கிழமை (ஜூன 16)  வெளியானது. 

News image
Updated On :16 ஜூன் 2023, 3:15 pm IST


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழத்தில் 2023-24 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெள்ளிக்கிழமை (ஜூன 16) வெளியானது. 

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 14 இளம் அறிவியல் பட்டப் படிப்புகள், 3 பட்டயப் படிப்புகளும் வழங்கப்படுகின்றன. 

இந்த நிலையில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு கடந்த மே 10 ஆம் தேதி வெளியானது. ஜூன் 9 ஆம் தேதி வரை  இணையதளம் மூலம் 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இந்த நிலையில் தமிழ்நாடு வேளாண் பல்கலை மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெள்ளக்கிழமை வெளியானது. 

இதில், விழுப்புரத்தைச் சேந்த மாணவி ஜி.வித்யாஸ்ரீ முதலிடம், மதுரையைச் சேர்ந்த பி.ஸ்ரீராம், தென்காசியைச் சேர்ந்த எஸ். முத்துலட்சுமி அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். மூன்று பேரும் 200 கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளனர். 199.5 மதிப்பெண்கள் 15 பேர் பெற்றுள்ளனர். 

தரவரிசைப் பட்டியல் www.tnau.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.