நேபாள வெள்ளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் ராஜ்மோகன்செப். இறுதி வரை நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும்: அண்ணாமலைஅமராவதி அணையில் இருந்து நாளைமுதல் நீர் திறப்பு: முதல்வர் விஜய் உத்தரவுஉஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாடு வேளாண் பல்கலை மாணவர் சேர்க்கை: தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழத்தில் 2023-24 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெள்ளிக்கிழமை (ஜூன 16)  வெளியானது. 

Published On :2 பிப்ரவரி 2024, 12:38 am IST


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழத்தில் 2023-24 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெள்ளிக்கிழமை (ஜூன 16) வெளியானது. 

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 14 இளம் அறிவியல் பட்டப் படிப்புகள், 3 பட்டயப் படிப்புகளும் வழங்கப்படுகின்றன. 

இந்த நிலையில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு கடந்த மே 10 ஆம் தேதி வெளியானது. ஜூன் 9 ஆம் தேதி வரை  இணையதளம் மூலம் 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இந்த நிலையில் தமிழ்நாடு வேளாண் பல்கலை மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெள்ளக்கிழமை வெளியானது. 

இதில், விழுப்புரத்தைச் சேந்த மாணவி ஜி.வித்யாஸ்ரீ முதலிடம், மதுரையைச் சேர்ந்த பி.ஸ்ரீராம், தென்காசியைச் சேர்ந்த எஸ். முத்துலட்சுமி அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். மூன்று பேரும் 200 கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளனர். 199.5 மதிப்பெண்கள் 15 பேர் பெற்றுள்ளனர். 

தரவரிசைப் பட்டியல் www.tnau.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.