டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மீன்பிடி தடைகாலம் முடிந்து கடலுக்குச் சென்ற தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள்!

தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் மீன்பிடி தடைக்காலம் முடிந்து வெள்ளிக்கிழமை காலையில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

News image
தூத்துக்குடியில் கடலுக்கு புறப்பட்டு சென்ற விசைப்படகு மீனவர்கள்
Updated On :2 பிப்ரவரி 2024, 11:47 am

DIN

தூத்துக்குடி: தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் மீன்பிடி தடைக்காலம் முடிந்து வெள்ளிக்கிழமை காலையில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

தூத்துக்குடியில் 61 நாள்கள் மீன்பிடி தடைக்காலத்திற்கு பின்பு வியாழக்கிழமை (ஜூன் 15) விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல இருந்தனர். 

இந்த நிலையில் மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு கடல் பகுதியில் காற்று 45 கிலோ மீட்டர் முதல் 65 கிலோ மீட்டர் வரை வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தனர். 

Story image

இதையடுத்து, அன்றைய தினம் கடலுக்குச் செல்ல விசைப்படகு மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. மேலும், வரும் 18 ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், சுமார் 250-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் வெள்ளிக்கிழமை காலையில் மீன்பிடிக்க புறப்பட்டுச் சென்றனர். 

மீன் பிடிக்க விசைப் படகுகள் கடலுக்கு செல்வதை பார்க்க மீனவர்கள் பலர் குவிந்தனர். மீன்பிடி தடைக்காலம் முடிந்து செல்வதால் தங்களுக்கு அதிக அளவிலான மீன்கள் கிடைக்கும் என விசைப்படகு மீனவர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.