பட்டுக்கோட்டையின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நகர செயலாளரும், நகைகடை உரிமையாளருமான ரோஜா ராஜசேகர் ஞாயிற்றுக்கிழமை இரவு ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் தேரடித்தெருவைச் சேர்ந்தவர் நகைக்கடை உரிமையாளர் ரோஜா ராஜசேகரன். இவர் திருட்டு நகை வாங்கியதாகக் கூறி கடந்த 22 ஆம் தேதி அன்று கடைக்குள் அத்துமீறி நுழைந்த போலீசார் அங்குள்ள பெண் ஊழியரை தரக்குறைவாக பேசியதுடன், நகைக்கடை உரிமையாளரையும் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து நகைக்கடை உரிமையாளர் வீட்டிற்கு சென்று தரக்குறைவாக பேசி, வீட்டில் இருந்த பீரோ மற்றும் பொருட்களை உடைத்து சோதனை செய்தது மட்டுமல்லாமல் அவரது மனைவியையும் தரக்குறைவாக பேசி அவரையும் கைது செய்தனர்.
இதனைக் கண்டித்து பட்டுக்கோட்டையில் நகர தங்கம், வெள்ளி வியாபாரிகள் சங்கம் மற்றும் பொற்கொல்லர் சங்கத்தினர் தங்களது கடைகளை அடைத்து தேரடித்தெரு முக்கத்தில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
பின்னர் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் சாலை மறியலை கைவிட்டனர். அதனைத் தொடர்ந்து சனிக்கிழமை மதியம் கடைக்கு வந்த ரோஜா ராஜசேகர் மனநிலை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 20 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு எர்ணாகுளம் செல்லும் ரயில் பட்டுக்கோட்டை அருகே உள்ள செட்டியக்காடு என்ற கிராமப் பகுதியில் வந்துகொண்டிருந்தபோது ரயிலின் முன் பாய்ந்து அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையும் படிக்க- லியோ பட பாடல்: நடிகர் விஜய் மீது போலீசில் புகார்
கடந்த 22 ஆம் தேதி திருச்சியில் இருந்து வந்த குற்றப்பிரிவு போலீசார் திருட்டு நகை வாங்கியதாகக் கூறி பட்டுக்கோட்டையில் ரோஜா ராஜசேகர் கடை உள்பட இரண்டு கடை மற்றும் ஊரணிபுரம் பகுதியில் 3 கடை உரிமையாளர்களை மிரட்டி ஒரு குறிப்பிட்ட அளவு நகையினை பெற்றுச் சென்றதாகக் கூறப்படுகிறது. அதில் ரோஜா ராஜசேகரிடம் பேரம் பேசி ஐந்து பவுன் நகை மிரட்டி வாங்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் திருட்டு நகை வாங்கியதாக கைது செய்யப்பட்ட அவமானம் என மிகுந்த மன உளைச்சலில் இருந்த அவர் இந்த தற்கொலை முடிவு எடுத்ததாகக் கூறப்படுகிறது.
சடலத்தை மீட்ட காவல்துறையினர் உடற்கூராய்வுக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுக 20 இடங்களில் வென்றாலே ஆச்சரியம்தான்: இபிஎஸ் பேச்சு

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெயிண்ட் விலை அதிகரிப்பு!

வைத்தீஸ்வரன் கோயிலில் நகரத்தார் குலதெய்வ வழிபாடு: திரளானோர் பங்கேற்பு!
நானும் திராவிடன்தான்! சென்னையில் சந்திரபாபு நாயுடு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


