தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

லியோ பட பாடல்: நடிகர் விஜய் மீது போலீசில் புகார்

லியோ பட பாடலுக்கு எதிராக சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.  

Published On :

லியோ பட பாடலுக்கு எதிராக சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

சென்னை கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் செல்வம் ஆன்லைன் மூலமாக லியோ பட பாடலுக்கு எதிராக புகார் மனு அளித்துள்ளார். போதைப்பொருள் பழக்கம், ரௌடிசத்தை ஊக்குவிக்கும் வகையில் லியோ பட நா ரெடி பாடல் உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. நடிகர் விஜய் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் படம் லியோ. இப்படத்தில் விஜய் நாயகனாகவும் அவருக்கு ஜோடியாக த்ரிஷாவும் நடிக்கிறார். மேலும் படத்தில் சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜுன், மன்சூர்அலிகான் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது. 

லியோ படம் வெளியீட்டிற்கு முன்பே ஓடிடி, இசை உரிமம், விநியோக உரிமம் என ரூ.350 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், லியோ படத்தின் முதல் பாடலான 'நா ரெடி'  பாடல் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு அண்மையில் வெளியாகியுள்ளது. விஜய் பாடியுள்ள இப்பாடலில் அவருடன் இணைந்து 100க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் நடனமாடி உள்ளனர்.

மேலும் இப்பாடலுக்கு ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பு அளித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.