கூடலூர்: முதுமலை புலிகள் காப்பகத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பிலான காடுகள் எரிந்து சாம்பலாகின.
முதுமலை புலிகள் காப்பக வனத்தில் மசினகு பகுதியில் மதியம் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. இதனைப் பார்த்த வனத்துறை ஊழியர்கள் அதனைக் கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால் அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. வெப்பம் அதிகமாக இருந்ததால், காட்டுத் தீ மளமளவென எரிந்து பல நூறு ஏக்கர் பரப்பிலான காடுகள் சாம்பலாகின.
இதையும் படிக்க.. சுஷ்மிதாவை தாக்கிய மாரடைப்பு சொல்லும் பாடங்கள்
மரவகண்டி அணையின் கரை ஓரத்தில் உள்ள மூங்கில் காட்டில் 50 அடி உயரத்திற்கு தீ எரிந்து வருகிறது. காட்டுத் தீயை அணைக்க 50க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஒரு மணி நேரமாக போராடி வருகின்றனர்.
இதையும் படிக்க.. நிலநடுக்கம் தாக்கினால் சென்னை தாங்குமா?