இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

‘இளைய நிலா’ புகழ் கிடாரிஸ்ட் கலைஞர் சந்திரசேகர் காலமானார்

பிரபல கிடாரிஸ்ட் ஆர்.சந்திரசேகர்(79), புதன்கிழமை இரவு காலமானார். சந்திரசேகரின் மறைவு இசை ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 12:12 pm IST


தமிழ் திரையுலகில் இளையராஜாவின் இசையில் ‘இளைய நிலா பொழிகிறதே’, ‘பாடி வா தென்றலே’, ‘பாடும் வானம்பாடி’ போன்ற பாடல்களுக்கு இசையமைத்த பிரபல கிடாரிஸ்ட் ஆர்.சந்திரசேகர்(79), புதன்கிழமை இரவு காலமானார். சந்திரசேகரின் மறைவு இசை ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளையராஜாவிற்கு முதல் படம் முதல் டிரம்மராகவும், இசை கண்டக்டராகவும் பணியாற்றி, 2020 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் உயிரிழந்த புருஷோத்தமன் இவரது மூத்த சகோதரர் ஆவார். 

பயணங்கள் முடிவதில்லை படத்தில் இடம்பெற்ற ‘இளைய நிலா பொழிகிறதே’ பாடலின் கிடார் இசைத் துணக்குகளை வாசித்து புகழ்பெற்ற சந்திரசேகர், இளையராஜாவின் ‘பாடி வா தென்றலே’ மற்றும் ‘பாடும் வானம்பாடி’ உள்ளிட்ட பெரும்பாலான ஹிட் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கி வைத்திருந்தவர் சந்திரசேகர் என்பது குறிப்பிடத்தக்கது.

கே.வி. மகாதேவன், எம்.எஸ்.வி, இளையராஜா உள்ளிட்ட எண்ணற்ற இசையமைப்பாளர்களிடம் கிடாரிஸ்ட் மற்றும் கீபோர்ட் கலைஞராக  பணியாற்றியுள்ள சந்திரசேகர், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி படங்களில் பணியாற்றி உள்ளார்.  

இளையராஜாவின் நீண்டகால நண்பரும், அன்னக்கிளி படத்தில் இருந்து பணிபுரிந்தவந்த மூத்த இசைக் கலைஞர் சந்திரசேகர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மகன் சஞ்சய் இசை அமைப்பாளர்.

சந்திரசேகர் மறைவுக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கிடாரிஸ்ட் சந்திரசேர் மறைவு செய்தியை இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது முகநூல் பதிவில் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.