
கோப்புப்படம்
ஓபிஎஸ் உடன் செல்லாதது ஏன் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் விளக்கம் அளித்துள்ளார்.
தஞ்சையில் இன்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் செய்தியாளை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தினகரன் சந்திப்பு குறித்து இபிஎஸ் பேசியுள்ளார். அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைந்து தமிழகத்தில் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் ஓபிஎஸ் டிடிவி தினகரனை சந்தித்தார்.
ஓபிஎஸ் உடன் பன்ரூட்டி ராமசந்திரன் சென்றது எங்களுக்கு விருப்பமில்லை என்றும், வேறுபட்டு இருக்கிறோம் என்று கருத்தை இபிஎஸ் பேசியுள்ளார். ஒரு முன்னாள் முதல்வர் கற்பனையில் பேசுவது அவர் வகித்த பதவிக்கு அழகல்ல.
ஓபிஎஸ் - டிடிவி தினகரன் - சசிகலா - ஏசி சண்முகம் இவர்கள் எல்லாம் பிரிந்து இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்தால் தான் மீண்டும் ஆட்சிக்கு வர முடியும்.
இதையும் படிக்க: எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள்: ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வீட்டின் முன்பு குவிந்தனர்!
டிடிவி தினகரன் ஓபிஎஸ்யும் முதன்முதலாக சந்திப்பதால் கூட்டமாக செல்ல வேண்டாம் என்று நாங்கள் செல்லவில்லை. எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை அழிக்க நினைக்கிறார். ஒருபோதும் அதிமுகவை அழிக்க முடியாது. வேண்டுமானால் எடப்பாடியை தவிர்த்துவிட்டு அதிமுக ஒன்றுபடும் என்று தெரிவித்தார்.