திருப்பூர்: மதிமுகவின் வாழ்நாள் உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அக்கட்சியின் மாநில அவைத் தலைவர் சு.துரைசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திருப்பூரில் மதிமுக மாநில அவைத் தலைவர் சு.துரைசாமி செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மதிமுக தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து தங்களது குடும்பத்தைச் சேர்ந்த யாரும் பதவிக்கு வரமாட்டார்கள் என்று பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்து வந்தார். இதனை தலைமைக்கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் முழுமையாக நம்பி வந்தனர்.
ஆனால் தங்களது மகனான துரை வைகோவை அரியாசனத்தில் அமர்த்த விரும்பும் தங்களது நடவடிக்கையில் என்னைப் போன்றவர்களுக்கு உடன்பாடு இல்லை. பேரறிஞர் அண்ணாவின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று வாழ்ந்து அரசியல் செய்து வந்த என்னால் இனியும் வைகோவுடன் பயணிக்க இயலாது.
அவர் மீது நம்பிக்கை வைத்து அன்று உயிர் நீத்த உண்மைத் தொண்டர்களுக்காக கட்சியை திமுகவுடன் இணைத்து விடுவது நல்லது. எனெனில் மதிமுகவுக்கு என்று தனியாக எதிர்காலம் இல்லை. ஆகவே, மதிமுகவின் வாழ்நாள் உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் என்னை விடுவித்துக் கொள்கிறேன்.
அதே வேளையில், எந்த ஒரு அரசியல் கட்சியில் சேரும் எண்ணமும் இல்லை. ஆனால் கோவை பெரியார் மாவட்ட பஞ்சாலை தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச் செயலாளராக தொடர்ந்து நீடிப்பதாக தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மின்சாரம் பாய்ந்து பசுமாடு உயிரிழப்பு

36 உத்தரமேரூா்

தருமபுரி அருகே மின்சாரம் பாய்ந்து இருவா் உயிரிழப்பு

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,200 கனஅடியாக சரிவு
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


