ராமேசுவரம்: கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மண்டபம் மீனவர்கள் 27 பேருடன் 5 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மற்றும் மண்டபம் பகுதியில் இருந்து 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் சனிக்கிழமை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

நள்ளிரவு கச்சத்தீவு நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடிக்கும் போது 6 ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரத்தை சேர்ந்த கென்னடி, பாஸ்கர், சர்புதீன், ரீடன் ஆகியோரின் நான்கு படகுகள் அதில் இருந்த குணசேகரன், ராமநாதன், பாலு, கண்ணன், ஜஸ்டீன், மோபின், அருள்தாஸ், சேவியர், கிளின்டன், மீதுன் உள்ளிட்ட 22 மீனவர்களை சிறைபிடித்தனர்.

இதே போன்று மண்டபத்தை சேர்ந்த மரிய வாசிங்டன் என்பவது ஒரு படகு அதில் இருந்த 5 மீனவர்களை சிறைபிடித்தனர். தலைமன்னார் மற்றும் காங்கேசம் துறைமுகத்திற்கு அழைத்து சென்று, படகை பறிமுதல் செய்து மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஒரு நாளில் 27 மீனவர்களுடன் 5 விசைப்படகுகள் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களிடையே பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியானது உயிர் திரைப்படம்!

உதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!
உதயநிதி கைது; தவெக அரசின் கோழைத்தனம்: கனிமொழி கண்டனம்

Bunch Of Idiots! கைதான பிறகு உதயநிதி ஸ்டாலின்! | DMK | TVK
விடியோக்கள்

உதயநிதி ஸ்டாலின் கைது! பரபரப்பான நிமிடங்கள்! | TVK | DMK



