டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கீழ்வேளூரில் வர்த்தகர் சங்கத்தினர் சாலை மறியல்!

கீழ்வேளூரில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை கண்டித்து வர்த்தக சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கீழ்வேளூர் வர்த்தகர் சங்கத்தினர்.
Updated On :6 பிப்ரவரி 2024, 1:19 pm

DIN

கீழ்வேளூர்: கீழ்வேளூரில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை கண்டித்து வர்த்தக சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.1700 கோடி மதிப்பில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் நாகை மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி, கீழ்வேளூர் பகுதியில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் பழைய குழாய்களை அகற்றி புதிய ராட்சத குழாய்கள் அமைக்கும் பணிகளும், நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாலை விரிவாக்கம் செய்யும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சாலையின் இருபுறமும் தோண்டப்படும் பள்ளங்கள் சரியாக மூடப்படாத காரணத்தால் விபத்துகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கீழ்வேளூர் - கச்சனம் சாலையில் ஒரு மாத காலமாக சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு மண் திட்டுகள் உள்ளதால் மழை காலங்களில் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமமடைந்து வருகின்றனர். கடைகளை திறக்க முடியாமல் வணிகர்களும் வியாபாரம் தொய்வடைந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். 

இதுகுறித்து கடந்த ஒருமாத காலமாக கீழ்வேளூர் வர்த்தகர் சங்கத்தினர், நாகை மாவட்ட குடிநீர் வடிகால் வாரிய மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் உரிய பதில் கிடைக்காத நிலையில் வர்த்தகர்கள் கீழ்வேளூர் கடைத்தெருவில் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தோண்டப்பட்ட பள்ளங்களை மூடும் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும் அலட்சியமாக செயல்படும் அதிகாரிகளை கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். 

இதனிடையே, சம்பவ இடத்திற்கு வந்த கீழ்வேளூர் காவல் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து வர்த்தகர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

வர்த்தகர்களின் சாலை மறியல் போராட்டம் காரணமாக நாகை - திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.