திருப்பத்தூரில் டெங்கு காய்ச்சலுக்கு 5 வயது சிறுமி பலி!

திருப்பத்தூரில் டெங்கு காய்ச்சலுக்கு 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். 
திருப்பத்தூரில் டெங்கு காய்ச்சலுக்கு 5 வயது சிறுமி பலி!
Updated on
1 min read

திருப்பத்தூரில் டெங்கு காய்ச்சலுக்கு 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். 
 
சிவராஜ் பேட்டை பகுதியைச் சேர்ந்த அபிநிதி திருப்பத்தூர் நகராட்சியில் உள்ள தனியார்ப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 23-ம் தேதி காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது. 

பின்னர், மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி செப்.27-ம் தேதி இரவு உயிரிழந்தார். சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பத்தூர் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை சார்பில் கிருமிநாசினி கொண்டு சுத்தம்செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com