கோப்புப்படம்
கோப்புப்படம்

கும்மிடிப்பூண்டி செல்லும் இரவு ரயில்கள் ரத்து

சென்னை சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி இடையே இயக்கப்படும் இரவு நேர மின்சார ரயில்கள் செவ்வாய்க்கிழமை ரத்து செய்யப்படும்.

சென்னை சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி இடையே இயக்கப்படும் இரவு நேர மின்சார ரயில்கள் செவ்வாய்க்கிழமை ரத்து செய்யப்படும்.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திகுறிப்பு: சென்னை சென்ட்ரல் ரயில்வே பணிமனையில் செவ்வாய்க்கிழமை இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. இதனால் சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன. சென்னை சென்ட்ரலில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு 9.45 மற்றும் 10.20 மணிக்கு புறப்படும் ரயில்களும், மறுநாள் அதிகாலை 5.40 மற்றும் 6.25 மணிக்கு புறப்படும் ரயில்களும் ரத்து செய்யப்படும். மறுமாா்க்கமாக கும்மிடிப்பூண்டியில் இருந்து இரவு 8.15 மற்றும் 9.15 மணிக்கு புறப்படும் ரயில்களும், மறுமாள் அதிகாலை 3.50 மற்றும் 4.50 மணிக்கு புறப்படும் ரயில்களும் ரத்து செய்யப்படும். சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11.45 மற்றும் 12.15 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் ரயில்கள் கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும். சூலூா்பேட்டையில் இருந்து இரவு 8.20, 9.40 மற்றும் 10.45 மணிக்கு புறப்படும் ரயில்கள் சென்ட்ரல் வருவதற்கு பதிலாக கடற்கரை ரயில் நிலையத்துக்கு வந்து சேரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com