‘கூசாமல் புளுகும் மோடி’: முதல்வர் ஸ்டாலின்

’குறைந்த வங்கி இருப்புத் தொகைக்கான அபராதமாக மட்டுமே ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் ஏழைகளிடம் உருவியிருக்கிறார்கள்’
‘கூசாமல் புளுகும் மோடி’: முதல்வர் ஸ்டாலின்

ஏழைகளுக்கான அரசு எனக் கூசாமல் புளுகுகிறார் பிரதமர் மோடி என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பு அடைந்துள்ள நிலையில், பாஜக தலைமையிலான மத்திய அரசையும், பிரதமர் நரேந்திர மோடியையும் முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி, வரிச் சலுகைகள் உள்ளிட்டவை சுட்டிக்காட்டி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

“மோடியின் 'புதிய இந்தியா'வில் டிஜிட்டல் வழிப்பறி. ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் என்று எளிய மக்களின் ஆசையைத் தூண்டி ஆட்சிக்கு வந்தவர்கள் செய்தது என்ன? சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் செல்லாததாக்கி, வங்கிகளில் வரிசையில் நிற்க வைத்து வதைத்தார்கள்.

சுருக்குப் பையில் இருக்கும் பணத்தையும் பறித்துக் கொள்ளும் ஆட்சியாக, மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் ஏழைகளிடம் உருவியிருக்கிறார்கள்.

‘கூசாமல் புளுகும் மோடி’: முதல்வர் ஸ்டாலின்
ஆகஸ்டில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்!

கார்ப்பரேட்களுக்குப் பல லட்சம் கோடி கடன் தள்ளுபடி, கார்ப்பரேட் வரியை 30 விழுக்காட்டில் இருந்து 22 விழுக்காடாக குறைத்து, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான கோடிகளை வரிச் சலுகையாக அள்ளித் தந்துவிட்டு, அதை ஈடுகட்ட, மனதில் ஈரமே இல்லாமல், அல்லற்படும் ஏழை மக்களிடம் அரசே இப்படி டிஜிட்டல் வழிப்பறி செய்வதை அனுமதிக்கலாமா?

இது பணக்காரர்கள், கோடீஸ்வரர்களுக்கான அரசு அல்ல; ஏழைகளுக்கான அரசு எனக் கூசாமல் புளுகுகிறார் பிரதமர் மோடி. இதுவா ஏழைகளின் நலன் காக்கும் அரசு?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com