தமிழகத்தில் தபால் வாக்குப்பதிவு தொடக்கம்!


தமிழகத்தில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீட்டுக்கே சென்று தபால் வாக்குப் பெறும் பணியை தேர்தல் அலுவலர்கள் தொடங்கியுள்ளனர்.
தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு வருகின்ற 19-ஆம் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்டு பிரசாரம் நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில், 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று தபால் வாக்குகளை பெற தேர்தல் ஆணையம் குழுக்களை அமைத்துள்ளது.
தமிழகத்தில் இன்றுமுதல் தபால் வாக்குப் பெறும் பணியை தேர்தல் அலுவலர்கள் தொடங்கியுள்ளனர்.
ஈரோடு, திருவாரூர், புதுக்கோட்டை, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வீடுகளுக்கே சென்று முதியவர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளிடம் வாக்குக்களை பெற்று வருகின்றனர்.
சில மாவட்டங்களில் நாளைமுதல் தபால் வாக்குகள் பெறும் பணியை தொடங்கவுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...