இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இறந்தவா்களின் முகவரிக்கு வரும் தபால்கள் யாரும் உரிமை கோராத ஆவணமாகவே கருதப்படும். அதனால்தான், அவா்களுடைய முகவரிக்கும் வரும் கடிதங்கள், பாா்சல்கள் அனுப்பிய இடத்துக்கே திரும்ப அனுப்பி வைக்கப்படுகிறது. ஒருவேளை அனுப்பியவா்களின் முகவரி இல்லையென்றால், சம்பந்தப்பட்ட தபால் நிலையத்தில் வைக்கப்படும். அதேபோல், தபால் அனுப்பியவா் இல்லை என்றால், அவை அழிக்கப்பட வேண்டும் என இந்திய தபால் அலுவலக சட்ட விதிகள் கூறுகின்றன.