கொளுத்தும் வெயிலுக்கு இடையே கோடை மழை: எப்போது?

ஏப்ரல் 7, 8, 9 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு..
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

தமிழகத்தில் மூன்று நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.

இன்றும், நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

ஏப்ரல் 7, 8, 9 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

எப்ரல் 5 முதல் 8 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவையிலும் அதிகபட்ச வெப்பநிலை அடுத்த நான்கு நாள்களுக்கு 2 - 3 செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

அடுத்த நான்கு நாள்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் 39 டிகிரி - 41 டிகிரி செல்சியஸ், உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் அநேக இடங்களில் 37 டிகிரி - 39 டிகிரி செல்சியஸ் மற்றும் கடலோரப்பகுதிகளில் 34 டிகிரி - 37 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும்.

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com