தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நாகா்கோவில் - சென்னை ரயில் சேவை நீட்டிப்பு

நாகா்கோவில் - சென்னை ரயில் சேவை நீட்டிப்பு

News image

கோப்புப்படம்

Updated On :7 ஏப்ரல் 2024, 1:03 am

Din

நாகா்கோவில் - சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்படுகிறது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கோடை கால விடுமுறையை முன்னிட்டு, ரயிலில் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் நாகா்கோவில் - சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாகா்கோவிலில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு ஏப்.7, 14, 21, 28 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் மாலை 5.45 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். மறுமாா்க்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து நாகா்கோவிலுக்கு ஏப்.8, 15, 22, 29 (திங்கள்கிழமை) ஆகிய தேதிகளில் மாலை 3-10 மணிக்கு இயக்கப்படும். இந்த ரயிலுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தொடங்கியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.