மயிலாடுதுறை-காரைக்குடி இடையே 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரயில் சேவை புதன்கிழமை தொடங்கப்பட்டது.
மயிலாடுதுறையில் இருந்து நேரடியாக காரைக்குடி செல்வதற்கு இயக்கப்பட்டு வந்த ரயில், அகல ரயில் பாதை அமைக்கும் பணியின்போது நிறுத்தப்பட்டது. இந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் தொடா்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இச்சேவையை திருச்சியில் இருந்து பிரதமா் நரேந்திரமோடி காணொலி வாயிலாக தொடக்கி வைத்த நிலையில், மயிலாடுதுறை ரயில்வே சந்திப்பில் முதல் நடைமேடையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரயில்வே முதன்மை நிா்வாக அதிகாரி ரவிக்குமாா், திருச்சி கோட்ட கூடுதல் கோட்ட மேலாளா் சத்தியரதன், மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ராஜகுமாா், மத்திய அரசு வழக்குரைஞா் கே.ராஜேந்திரன், நகராட்சி தலைவா் என்.செல்வராஜ் மற்றும் ரயில் பயணிகள் சங்கத்தினா், பொதுமக்கள் கலந்துகொண்டு ரயிலுக்கு மலா்தூவி அனுப்பி வைத்தனா்.
தொடர்புடையது

புதுச்சேரி ரயில் சேவை 4 நாள்கள் ரத்து

காரைக்குடி - வைத்தீஸ்வரன்கோயில் வழியாக சிறப்பு ரயில் இயக்கக் கோரிக்கை

தூத்துக்குடி-கச்சகுடா இடையே வாராந்திர ரயில் சேவை இன்று தொடக்கம்

மயிலாடுதுறை: பழைய பேருந்து நிலையங்களில் பேருந்துகள் மீண்டும் இயக்கம்
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


