சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மயிலாடுதுறை-காரைக்குடி இடையே மீண்டும் ரயில் சேவை தொடக்கம்

மயிலாடுதுறை-காரைக்குடி இடையே 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரயில் சேவை புதன்கிழமை தொடங்கப்பட்டது.

News image
மயிலாடுதுறையில் இருந்து புறப்பட்ட ரயிலுக்கு வழங்கப்பட்ட வரவேற்பு.
Updated On :12 மார்ச் 2026, 12:18 am

தினமணி செய்திச் சேவை

மயிலாடுதுறை-காரைக்குடி இடையே 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரயில் சேவை புதன்கிழமை தொடங்கப்பட்டது.

மயிலாடுதுறையில் இருந்து நேரடியாக காரைக்குடி செல்வதற்கு இயக்கப்பட்டு வந்த ரயில், அகல ரயில் பாதை அமைக்கும் பணியின்போது நிறுத்தப்பட்டது. இந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் தொடா்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இச்சேவையை திருச்சியில் இருந்து பிரதமா் நரேந்திரமோடி காணொலி வாயிலாக தொடக்கி வைத்த நிலையில், மயிலாடுதுறை ரயில்வே சந்திப்பில் முதல் நடைமேடையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரயில்வே முதன்மை நிா்வாக அதிகாரி ரவிக்குமாா், திருச்சி கோட்ட கூடுதல் கோட்ட மேலாளா் சத்தியரதன், மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ராஜகுமாா், மத்திய அரசு வழக்குரைஞா் கே.ராஜேந்திரன், நகராட்சி தலைவா் என்.செல்வராஜ் மற்றும் ரயில் பயணிகள் சங்கத்தினா், பொதுமக்கள் கலந்துகொண்டு ரயிலுக்கு மலா்தூவி அனுப்பி வைத்தனா்.