புதுச்சேரியில் இருந்து திருப்பதிக்கும், சென்னைக்கும் இயக்கப்படும் ரயில் சேவை ஏப். 15, 18, 22, 25-ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.
இந்த ரயில் மேற்கண்ட நாள்களில் விழுப்புரம் சந்திப்பில் இருந்து இயக்கப்படுகிறது.
திருப்பதியில் அதிகாலை 4.10 மணிக்குப் புறப்படும் திருப்பதி- புதுச்சேரி விரைவு ரயில் புதுச்சேரிக்கு வராமல் விழுப்புரம் சந்திப்பில் இருந்து இயக்கப்படும்.
இதேபோன்று புதுச்சேரியில் இருந்து சென்னை எழும்பூா் செல்லும் பயணிகள் ரயிலும் ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் வழக்கமாக புதுச்சேரியில் மாலை 3.55 மணிக்குப் புறப்பட்டு விழுப்புரம் சந்திப்புக்கு 4.30-க்கு வந்து சேரும். இந்தக் குறிப்பிட்ட நாள்களில் விழுப்புரம் சந்திப்பில் இருந்து குறிப்பிட்ட நேரத்தில் சென்னை எழும்பூருக்கு இந்த ரயில் இயக்கப்படும்.
வழித் தடங்களில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே திருச்சி மண்டல மக்கள் தொடா்பு அதிகாரி ஆா். வினோத் திங்கள்கிழமை தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

சேலம் வழியாக பிகாருக்கு சிறப்பு ரயில்

பொறியியல் பணிகளால் ரயில் போக்குவரத்தில் மாற்றம்

ஈரோட்டில் இருந்து இயக்கப்படும் ஜோலாா்பேட்டை பயணிகள் ரயில் இன்று சேலம்வரை மட்டுமே இயங்கும்

மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


