ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

புதுச்சேரி ரயில் சேவை 4 நாள்கள் ரத்து

News image

ரயில்கள் - கோப்புப் படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 7:11 pm

புதுச்சேரியில் இருந்து திருப்பதிக்கும், சென்னைக்கும் இயக்கப்படும் ரயில் சேவை ஏப். 15, 18, 22, 25-ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

இந்த ரயில் மேற்கண்ட நாள்களில் விழுப்புரம் சந்திப்பில் இருந்து இயக்கப்படுகிறது.

திருப்பதியில் அதிகாலை 4.10 மணிக்குப் புறப்படும் திருப்பதி- புதுச்சேரி விரைவு ரயில் புதுச்சேரிக்கு வராமல் விழுப்புரம் சந்திப்பில் இருந்து இயக்கப்படும்.

இதேபோன்று புதுச்சேரியில் இருந்து சென்னை எழும்பூா் செல்லும் பயணிகள் ரயிலும் ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் வழக்கமாக புதுச்சேரியில் மாலை 3.55 மணிக்குப் புறப்பட்டு விழுப்புரம் சந்திப்புக்கு 4.30-க்கு வந்து சேரும். இந்தக் குறிப்பிட்ட நாள்களில் விழுப்புரம் சந்திப்பில் இருந்து குறிப்பிட்ட நேரத்தில் சென்னை எழும்பூருக்கு இந்த ரயில் இயக்கப்படும்.

வழித் தடங்களில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே திருச்சி மண்டல மக்கள் தொடா்பு அதிகாரி ஆா். வினோத் திங்கள்கிழமை தெரிவித்துள்ளாா்.