விக்கரவாண்டி தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் திங்கள்கிழமை அறிவித்துள்ளது.
விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி(71) கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னதாக உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
இந்த நிலையில், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து சட்டப்பேரவை செயலகம் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
வருகின்ற 19-ஆம் தேதி மக்களவைத் தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
எனினும், அதனுடன் விக்கிரவாண்டிக்கு இடைத்தேர்தல் நடத்த போதிய காலஅவகாசம் இல்லை.